பணிசெய்யும்போது உங்களுடைய ஈடுபாடு எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு உங்களுடைய பணியில் மனநிறைவும், திருப்தியும் அதிகரிக்கும். உங்களுடைய பணியில் முழு ஈடுபாட்டுடன் நீங்கள் பணி செய்வதற்கு இந்த சுயநெறிப் பணிகுழு முதன்மையானதாக மட்டுமல்லாமல் ஒரு நல்ல வழிகாட்டுதலாகவும் இருக்கும்.
வாடிக்கையாளர்கள் மனநிறைவு அடைய, உங்களுடைய பணியை நீங்களே திட்டமிட்டு அதை அன்றே முடிப்பதற்கு முயற்சி செய்து முழுமனதுடன் ஈடுபட்டால், உங்களுடைய பணி நிர்வாகத்தின் வளர்ச்சிக்கு கண்டிப்பாக ஒரு காரணமாக அமையும். உங்களுடைய விடா முயற்சியும், கூட்டு முயற்சியும் ஒன்று சேர்ந்து பணியில் உயர்வை (EXCELLENCE AT WORK) அடைய வேண்டும் என்ற குறிக்கோளை நோக்கிச் செல்ல வேண்டும். ஆக, நாம் எந்த ஒரு சிறு செயலைச் செய்தாலும் அதில் உயர்வானதொரு (EXCELLENCE) இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடனும், குறிக்கோளுடனும் பணி செய்ய வேண்டும்.
நன்றி. ஸ்ரீவத்ஸ் ராம், வீல்ஸ் இந்தியா, சுயநெறிப் பணிக்குழு


2 comments:
அழகாகச் சொன்னீர்கள்.
இன்று பணநிறைவையே நாடும் மனிதர்களுக்கு மனநிறைவை நினைவுபடுத்துகிறது தங்கள் ஆக்கம்.tllmes 228
அருமையாகச் சொன்னீர்கள்... வாழ்த்துக்கள்...
Post a Comment